நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எப்ஏஎம் மீதான குற்றச்சாட்டுகள் போலீஸ் புகார் செய்யப்படும்: டத்தோ ஹமிடின்

சுபாங் ஜெயா:

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைமைத்துவம், நிர்வாக பிரச்சினைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்படும் என்று அதன் தலைவர் டத்தோ ஹமிடின் கூறினார்.

அடையாளம் தெரியாத நபரிடம் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கடிதம் உண்மைக்குப் புறம்பானது.

மேலும் வேண்டுமென்றே தனிநபர்களைத் தாக்கியுள்ளது.

60ஆவது எப்ஏஎம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டதாகவும், போலீசில் புகார் அளிக்கப்பட வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த கடிதம் குறிப்பாக உள்நாட்டு, அனைத்துலக கால்பந்து ரசிகர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்தை உருவாக்கியுள்ளது.

ஆகவே இக்கடிதம் தொடர்பாக போலீஸ் புகார் செய்ய  எப்ஏஎம் பரிசீலித்து வருகிறது என்று டத்தோ ஹமிடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset