நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகே மார்ட் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு: கூச்சிங்கில் பரபரப்பு

கூச்சிங்:

சரவா கூச்சிங்கில் உள்ள கேகே மார்ட் கடையில் பெட்ரோல் குண்டு 'மோலோடோவ் காக்டெய்ல்' தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது கேகே மார்ட் மீது நடத்தப்படும்  மூன்றாவது தாக்குதல் சம்பவமாகும்.

கூச்சிங் ஜாலான் சடோக்கில் அமைந்துள்ள கடையின் ஊழியரிடமிருந்து இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு புகார் கிடைத்தது.

இந்தச் சம்பவத்தால் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த குடிநீர் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது.

மண்ணெண்ணெய், மஞ்சள் துணி கொண்ட கண்ணாடி போத்தலை வீசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்று  கூச்சிங் போலீஸ் தலைவர் அஸ்மோன் பாஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset