நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர் நலன்களுக்காக சொக்சோவின்  திட்டங்கள் மேம்படுத்தப்படும்: ஸ்டீவன் சிம்

புத்ராஜெயா:

தொழிலாளர் நலன்களுக்காக சொக்சோவின் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.

3கே எனப்படும் பணியாளர்களின் நலன், திறன்கள், உற்பத்தி திறனை உயர்த்துவது ஆகியவற்றில் மனிதவள அமைச்சு இலக்காக கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் சொக்சோவின் கீழ் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் குறுகிய, நடுத்தர, நீண்ட கால திட்டங்கள் உட்பட மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால திட்டமாக மார்ச் 26 அன்று மக்களவையில் சட்ட திருத்தத்தின் முதல் வாசிப்பின் அடிப்படையில் அமைச்சு தற்போதுள்ள சொக்சோ திட்டங்களையும் கொள்கைகளையும் மேம்படுத்தும்.

இது 1.45 மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும், அவர்களின் பாதுகாப்பு பலன்கள் 20.2 சதவீதம் அதிகரிக்கும். 

இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset