நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடித்துச் செல்லப்பட்ட தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது: 4 வயது சிறுமியின் உடலைத் தேடு பணி தொடர்கின்றது 

பெட்டாலிங் ஜெயா: 

நீரோட்டத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன இந்தோனேசியப் பெண்ணின் சடலம் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரின் நான்கு வயது மகளைத் தேடும் பணி தொடர்கின்றது. 

நேற்று செரி கெம்பாங்கான் ஜாலான் கே.பி 4/9 கோத்தா பெர்டானாவிலுள்ள நீர் வடிகாலில் அப்பெண்ணின் 10 வயது மகனின் சடலம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

செர்டாங் காவல்துறைத் தலைவர் ஏ.ஏ.அன்பழகன் கூறுகையில், 

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் செர்டாங்கிலுள்ள புத்ரா பெர்டானா, தாமான் லாகாட்டேஜ் அருகே உள்ள லோம்போங் டி தீவு என்ற இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் 38 வயது பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிற்பகல் 12.17 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

தற்போது அவரது மகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset