செய்திகள் மலேசியா
ஸம்ரி விவகாரத்தில் விவாதம் நடத்துவது முட்டாள்தனமானது: கணபதிராவ்
புத்ராஜெயா:
ஸம்ரி வினோத் விவகாரத்தில் விவாதம் நடத்துவது முட்டாள்தனமானது
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் இதனை தெரிவித்தார்.
இந்து சமயத்திற்கு எதிரான அவதூறுகள் மக்களவையிலும் மேலவையிலும் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஸம்ரி வினோத்திற்கு எதிராக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினோம்.
ஆனால் ஒரு சில கோமாளிகள் இதை குறித்து வேடிக்கையாக பேசுகின்றனர். விவாதத்திற்கு வர சொல்கிறார்கள்.
என்னை பொறுத்த வரையில் விவாதம் நடத்துவதெல்லாம் முட்டாள் தனமானதாகும்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும்.
இது தான் முறையான வழிமுறையாகும்.
அவ்வகையில் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் மகஜர் வழங்க முடிவு செய்த ஒருங்கிணைப்பாளர் சசி, இந்து சங்கம், இந்து தர்ம மாமன்னறம் உட்பட அனைத்து இயக்கங்களுக்கும் எனது பாராட்டுகள்.
அரசியலைத் தாண்டி ஓர் இந்துவாக இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொணடேன்.
இதுபோன்ற விவகாரங்களில் நீதி கிடைக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்று கணபதி ராவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm
ஸ்கூடாய் ஆற்றில் விழுந்த ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
May 2, 2024, 12:28 pm
மாமன்னருக்கு எதிராக அவதூறு பதிவை வெளியிட்ட பாபாகோமோ குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 2, 2024, 10:16 am