நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகம் அரசாங்கத்தை வெறுக்கத் தூண்ட முயற்சிப்பதற்கு சுயநலமே காரணம்: பிரதமர்

கோலாலம்பூர்:

இந்திய சமூகம் அரசாங்கத்தை வெறுக்கத் தூண்ட முயற்சிப்பதற்கு சுயநலமே முக்கிய காரணமாக உள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

மடானி அரசாங்கம்  இந்திய சமூகத்தை அரசாங்கம் ஓரங்கட்டியுள்ளது என்பதில் எந்தவொரு உண்மையும் இல்லை.

பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் ராமசாமியின் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடுவதாக நம்பப்படும் அன்வார், 

ஒரு சில தலைவர் இந்திய சமூகத்தை அரசாங்கத்தை வெறுக்கத் தூண்ட முயற்சிப்பதாகக் கூறினார்.

அதனால் தான் அவர்கள் இந்தியர்களுக்கு புரியாத வகையில் அவர்களைத் தூண்டிவிடவும், ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிக்கிறார்கள்.

அப்படி தூண்டுபவர்கள் சுயநலம் அல்லது பணக்காரர்களாக உள்ளனர்.

மேலும் சில சமயங்களில் அவர்களுக்கு கட்சி பதவி கொடுக்காததால் முட்டாளாக மாறி விடுகின்றனர்.

அது என் பிரச்சினையல்ல, கட்சியில் அவர்கள் சந்திக்க வேண்டிய பிரச்சினை.

இந்த பிரச்சினைகளை செய்பவர்கள் முன்பு என் நண்பர்களாக இருந்துள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset