நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபோரஸ்ட் சிட்டி கேசினோ  தொடர்பில் பொய்களைப் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

ஃபோரஸ்ட் சிட்டியில்  சூதாட்ட மையம் அமைக்கப்படுகிறது என்றக் குற்றச்சாட்டில் தன்னையும் அரசாங்கத்தையும் எந்தத் தரப்பினரும் தொடர்புப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

இக்குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்கள் அரசியல் ரீதியாக திவாலானவர்கள்.

இந்த விஷயத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஃபோரஸ்ட் சிட்டியில் சூதாட்ட மையத்தை அமைக்கும்  யோசனையை ஒருபோதும் முன்வைக்கவில்லை என்று அவர் கூறினார்.

அங்குச் சூதாட்ட மையத்தை அமைப்பதற்கான  எந்த ஆர்வத்தையும் மாட்சிமை தங்கிய மாமன்னர் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றார் அவர். 

பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset