நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய இளம் பெண்ணான ஹஷினேஸ்வரியைக் காணவில்லை; தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தகவல் 

கிள்ளான்: 

இந்திய இளம் பெண்ணான ஹஷினேஸ்வரியைக் காணவில்லை என்று தென் கிள்ளான் மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

17 வயது நிரம்பிய ஹஷினேஸ்வரி கடந்த மார்ச் 18ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் வீட்டிலிருந்து கம்பி நீட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இந்நிலையில், காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர். காணாமல் பெண் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் தாராளமாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலை தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தரப்பு தமது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset