நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலமில் வழிப்பறித் திருடனைத் துரத்திப்பிடித்த  நிறைமாதக் கர்ப்பிணி

ஷாஆலம்:

தமது கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை 9 மாதக் கர்ப்பிணி துரத்திப் பிடித்துள்ளார்.

அந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை ஷா ஆலாம்  நகரிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் நடந்தது.

2 பிள்ளைகளுக்குத் தாயான அந்த 37 வயதுப் பெண், கழிப்பறைக்குச் சென்றபோது 22 வயது ஆடவர் அவரது கைப்பையைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.

அந்தப் பெண்ணும் கூச்சலிட்டுக் கொண்டே ஆடவரைத் துரத்தியுள்ளார்.

பெண்ணின் சத்தத்தைக் கேட்டவர்கள் ஓடிவந்து திருடனைப் பிடிக்க உதவிசெய்ததாக கூறப்படுகிறது.

பெண்ணுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர் தற்போது பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆடவர் மீது ஏற்கனவே 4 குற்றப்பதிவுகள் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.
 
விசாரணைக்காக அவர் 3 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset