நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் வீட்டு வரி 4 மடங்கு அதிகரித்துள்ளது: அஸ்மின் குற்றச்சாட்டு

உலுசிலாங்கூர்:

சிலாங்கூர் அரசாங்கம் வீட்டு வரி விகிதத்தை தற்போதுள்ள மதிப்புடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு  அதிகரித்துள்ளது.

சிலாங்கூர் மாநில தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மாநிலத்தில் வீட்டு வரி 191.40 ரிங்கிட்டாக உள்ளது.

இது தற்போது 4 மடங்கு கூடுதலாக 429 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 தேதியிட்ட அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்  வெளியிட்ட அறிவிப்பின் மூலம் வரி விகிதம் அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பாங் ஜெயாவை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகர், நகரண்மை கழகங்கள் இதே நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இந்த விலை உயர்வை தேசியக் கூட்டணி வண்மையாக கண்டிக்கிறது என்று அஸ்மின் அலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset