நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் லிட்டில் இந்தியாவில் திடீர் வெள்ளம்

கிள்ளான்:

தொடர் கனமழை காரணமாக கிள்ளானின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் லிட்டில் இந்தியா அமைந்துள்ள ஜாலான் தெங்கு கிளானா மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.

பூலாத்தான் சிம்பாங் லீமாவிற்கு அருகிலுள்ள ஜாலான் தெங்கு கிள்ளான் கீழ் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள உணவகம் ஒன்றில் பணி புரியும் ந. துரைசிங்கம் தெரிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக  இதுவரை ஜாலான் தெங்கு கிளானாவின் மேல் பகுதியில் நல்ல நீர் ஓட்டம் உள்ளது. அங்கு வெள்ளம் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், கனமழை நீடித்தால் ஜாலான் தெங்கு கிளானாவின் முழுப் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கக்கூடும்.

மழை குறைந்தவுடன் நீரில் மூழ்கிய பகுதியில் தண்ணீர் வேகமாக குறைந்துள்ளது என்று துரைசிங்கம் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset