செய்திகள் மலேசியா
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் திடீர் வெள்ளம்
கிள்ளான்:
தொடர் கனமழை காரணமாக கிள்ளானின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் லிட்டில் இந்தியா அமைந்துள்ள ஜாலான் தெங்கு கிளானா மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.
பூலாத்தான் சிம்பாங் லீமாவிற்கு அருகிலுள்ள ஜாலான் தெங்கு கிள்ளான் கீழ் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள உணவகம் ஒன்றில் பணி புரியும் ந. துரைசிங்கம் தெரிவித்தார்.
அதிர்ஷ்டவசமாக இதுவரை ஜாலான் தெங்கு கிளானாவின் மேல் பகுதியில் நல்ல நீர் ஓட்டம் உள்ளது. அங்கு வெள்ளம் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், கனமழை நீடித்தால் ஜாலான் தெங்கு கிளானாவின் முழுப் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கக்கூடும்.
மழை குறைந்தவுடன் நீரில் மூழ்கிய பகுதியில் தண்ணீர் வேகமாக குறைந்துள்ளது என்று துரைசிங்கம் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm