நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைதான இஸ்ரேல் ஆடவர் வலுவான சந்தேக நபர்: அய்யூப் கான்

கோலாலம்பூர்:

அம்பாங்கில் கைது செய்யப்பட்ட உளவாளி என்று சந்தேகிக்கப்படும் இஸ்ரேலிய நபர் வலுவான சந்தேக நபர் என்று வர்ணிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் விசாரணை இன்னும் தொடர்கிறது என்று துணை போலீஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ அய்யூப் கான் மைடின் பிச்சை கூறினார்.

கடந்த புதன்கிழமை ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் 36 வயதான இஸ்ரேலிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் நேற்று தெரிவித்தார்.

அவரிடம் 6 கைத்துப்பாக்கிகள்,  200 தோட்டாக்கள் இருந்தன.

சந்தேக நபர், குடும்பத் தகராறில் மற்றொரு இஸ்ரேலிய நபரைக் கொல்ல மலேசியா வந்ததாகக் கூறினார்.

இதனை காவல்துறை முழுமையாக நம்பவில்லை.

பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

ஆகவே அவர்கள் உட்பட பொதுமக்கள் தேசியத் தலைவர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை இப்போது விழிப்புடன் இருப்பதாக டான்ஸ்ரீ ரஸாருதீன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset