நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிர்வாகியை பேங்க் நெகாரா பணி நீக்கம் செய்தது நியாயமற்றது: நீதிபதி

கோலாலம்பூர்:

நிர்வாகியை பேங்க் நெகாரா பணி நீக்கம் செய்தது நியாயமற்றது என்று நீதிபதி அஹ்மத் பாச்சே கூறினார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தவறான நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோகிலா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு விசாரணையின் போதும் ​​மேல்முறையீட்டு செயல்முறையின் போதும் அவரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.

நியாயமற்ற நடவடிக்கைகளால் அவர் பல இழப்புகளை எதிர்நோக்கியுள்ளார்.

கோகிலாவின் பணிநீக்கம் பணியாளரின் ஒப்பந்தத்தை மீறியதாக அறிவிக்க வேண்டும் என்ற கோகிலாவின் விண்ணப்பத்தையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

மேலும் இந்த வழக்கில் இழப்பீடுகள், செலவுத் தொகை பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset