செய்திகள் மலேசியா
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
சைபர்ஜெயா:
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கூறினார்.
தமிழ் அமுது இலக்கிய நிகழ்ச்சியும், விருதளிப்பு விழாவும் என காலையிலேயே இலக்கியம் பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் டான்ஸ்ரீ பழன் அறவாரியமும், தமிழவேள் கோ.சா.கல்வி அறவாரியமும் இணைந்து நடத்திய தமிழ் அமுது இலக்கிய விழாவின் நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்றதில் மகிழ்ச்சி.
தமிழ் மொழியும், அதன் சிறப்பும் சொல்லித் தெரிவதில்லை. இது உணவுக்கான மொழியல்ல. உணர்வுக்கான மொழி.
வாழ்க்கை நெறியைச் சொல்லும் அற்புதமான மொழி என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக தமிழ் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன், மலாயா பல்கலைக்கழக நூலக தமிழ் பிரிவு பொருப்பாளர் விஜயலட்சுமி, முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாதுரை, ஆகியோருக்கு தமிழ் அமுது சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2024, 6:34 pm
சக நண்பர் மீது ஆசிட் வீச்சு : கீர்த்தனா மீது குற்றச்சாட்டு
May 9, 2024, 6:33 pm
நீலமும் சிவப்பும் இணைந்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது: மஇகா இளைஞர் பிரிவு
May 9, 2024, 6:14 pm
துறைமுகத்தில் இருந்த கப்பல் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல: அந்தோனி லோக்
May 9, 2024, 6:12 pm
டிக் டோக்கில் பகிரப்படும் தகவல்களால் பெண் வாக்காளர்கள் ஏமாறக் கூடாது: வான் அசிசா
May 9, 2024, 5:27 pm