செய்திகள் மலேசியா
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
கோலாலம்பூர்:
முதியோர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது.
மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி இதனை உறுதிப்படுத்தினார்.
கெடாவின் படாங் செராயில் செயல்பட்டு வரும் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் முதியவர் ஒருவர் பராமரிப்பாளரால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகியது.
இச்சம்பவம் நடந்த முதியோர் இல்லம் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்படாதது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
சமூக நலத்துறையும், காவல்துறையும் நடத்திய விசாரணைக்குப் பிறகு இந்த விஷயம் வெளிவந்துள்ளது என்றார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 10:32 pm
மலேசியா - சீனா இரு நாடுகளின் 50 ஆண்டு கால தூதரக உறவுகளின் வளர்ச்சி
May 8, 2024, 6:55 pm
மலேசியாவில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
May 8, 2024, 5:11 pm