நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு தொகுதியை தேசியக் கூட்டணி வெல்லும் என 110 சதவீதம் நம்பிக்கை உள்ளது: மொஹைதின் 

உலு சிலாங்கூர்:

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியை தேசியக் கூட்டணி நிச்சயம் வெல்லும்.

இது சாத்திமாகும் என எனக்கு 110 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்று தேசியக் கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

இந்த தேர்தலில் 100 வெற்றி நம்பிக்கை கூட்டணி கட்சியின் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் பாங் சாக் தாவோவின் பக்கம் இருக்கிறது.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இவ்வாறு கூறினார்.

இதற்கு பதிலளித்த மொஹைதின், தமக்கு தேசியக் கூட்டணி வெற்றி பெறும் என 110 சதவீதம் நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்னால் அல்லது ஜாஹிட்டால் முடிவு செய்ய முடியாது. காரணம் நாங்கள் இங்குள்ள வாக்க்காளர்கள் அல்ல.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவு வாக்காளர்கள் கையில் தான் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset