செய்திகள் மலேசியா
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
புக்கிட் மெர்தாஜாம்:
நாசிகண்டார் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்திய செபராங் பெராய் போலீஸ் தலைவர் ஹெல்மி ஹாரிஸ் இதனை கூறினார்.
இங்குள்ள தாமான் மச்சாங் புபோக்கில் இன்னும் செயல்படாத நாசிகண்டார் உணவகத்தின் முன் சிவப்பு சாயம் அடங்கிய பல பொருட்களை ஒரு சிலர் வீசியுள்ளனர்.
நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் அடங்கிய சிசிடிவி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதன் அடிப்படையின் சம்பந்தப்பட்ட 3 நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 6:55 pm
மலேசியாவில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
May 8, 2024, 5:11 pm