நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்

உலு சிலாங்கூர்:

கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்.

அக்கட்சியின் தலைமை பொருளாளர் டத்தோஶ்ரீ டல்ஜித் சிங் இதனை கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது.

வேட்புமனு தாக்கலுக்கு பின் தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மைபிபிபி கட்சி மீண்டும் தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்படும் என அவர் கூறினார்.

இதன் அடிப்படையில் வரும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி பாடுபடும்.

குறிப்பாக அவ்வேட்பாளருக்கான வாக்குகளை சேகரிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset