செய்திகள் மலேசியா
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
உலு சிலாங்கூர்:
கோல குபு பாரு வாக்காளர்களுடனான நேரடி கலந்துரையாடல் நிகழ்வுக்கு துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்.
இந்த நிகழ்வு நாளை ஏப்ரல் 28ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு பத்தாங்காலி டத்தோ அப்துல் ஹமித் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் பாங் சோக் தாவ் போட்டியிடுகிறார்.
இவருக்கு வாக்கு சேகரிப்பதுடன் கோல குபு பாரு வாக்காளர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் இந்த கலந்துரையாடலுக்கு தலைமையேற்கவுள்ளார்.
மேலும் மக்களின் கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை அவர் வழங்கவுள்ளார்.
ஆகவே கோல குபு பாரு வாக்காளர்கள் திரளாக வந்த இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2024, 6:34 pm
சக நண்பர் மீது ஆசட்வீச்சு : கீர்த்தனா மீது குற்றச்சாட்டு
May 9, 2024, 6:33 pm
நீலமும் சிவப்பும் இணைந்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது: மஇகா இளைஞர் பிரிவு
May 9, 2024, 6:14 pm
துறைமுகத்தில் இருந்த கப்பல் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல: அந்தோனி லோக்
May 9, 2024, 6:12 pm
டிக் டோக்கில் பகிரப்படும் தகவல்களால் பெண் வாக்காளர்கள் ஏமாறக் கூடாது: வான் அசிசா
May 9, 2024, 5:27 pm
கோல் குபு பாருவில் மின்சுடலை நிர்மாணிக்கப்படும்: சுற்றுலா அமைச்சர் தியோங் அறிவிப்பு
May 9, 2024, 4:24 pm