நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலவச டோல் சேவை கட்டணம் நீட்டிக்கப்படாது: அஹ்மத் மஸ்லான்

பெட்டாலிங் ஜெயா: 

நோன்பு பெருநாளை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இலவச டோல் கட்டண சேவையை நீட்டிப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமுமில்லை என்று துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹம்மத் மஸ்லான் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 8,9 ஆம் தேதிகளில் மட்டுமே இந்த இலவச டோல் சேவை அமலில் இருக்கும் என்றார் அவர். 

இந்த இருநாள் இலவச டோல் சேவையால் அரசாங்கம் 38 மில்லியன் ரிங்கிட்டைச் செலவழிக்கவுள்ளது. 

முன்னதாக, வியாழனன்று நெடுஞ்சாலைகளில் 1 ஆம் வகுப்பு தனியார் வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8,9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா டோல் சேவைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொதுபணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset