செய்திகள் மலேசியா
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் மஹிமாவும் இணைந்து ஏற்பாடு செய்த 3 நாள் சைவத் திருமுறை மாநாட்டில் கலந்து கொண்டு, காளத்தியப்பரும் கண்ணப்பரும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
கேள்வி ஞானம் மிகமிக அவசியம். தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள். இது போன்ற சமய உரைகளை நிறைய கேட்க வேண்டும்.
பூஜை அறையில் இருக்கும் இறைவனை வேண்டாமல் கோவிலுக்குச் செல்வதால் மட்டும் பயன் கிடைக்காது.
அன்பு, பக்தி, எளிமை மூன்றும் இருந்தால் இறைவன் நம் வசம். வாழ்க்கையைக் கட்டங்கள் மாற்றுவதில்லை, திட்டங்களால் மட்டுமே மாற்ற முடியும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தலைநகர் பங்குனான் மாரியம்மன் மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, அறங்காவலர் டத்தோ சிவக்குமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2024, 10:43 pm
மரம் விழுந்த சம்பவத்தில் தப்பிய மலாக்கா முதல்வர்
May 13, 2024, 10:40 pm
உலுசிலாங்கூர் மஇகா தொகுதி தலைவர் பதவிக்கு கடும் போட்டி; சவாலை எதிர்கொள்வேன்: டத்தோ மூர்த்தி
May 13, 2024, 5:30 pm
மரம் சாய்ந்ததன் விளைவாக ஜாலான் பினாங் தற்காலிகமாக மூடப்பட்டது
May 13, 2024, 5:24 pm