நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்

சுங்கைபூலோ:

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு சுங்கைபூலோவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெருநாள் காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவது வழக்கம்.

அவ்வகையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்நிகழ்வு அமானா இக்தியாருடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக சுங்கைபூலோ சுற்றுவட்டாரத்தில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் 150 பேருக்கு உதவி நிதிகள் வழங்கப்பட்டது.

அதே போன்று நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கு பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

பெருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பான முறையில் இந்நிகழ்வு நடத்தப்படும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset