நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி

ஈப்போ:

பேரா மாநில மாநில மஇகாவின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி ஆகிய தொகுதிகளுக்கான தேர்தலை முன்னிட்டு  அதற்கான வேட்பு மனுதாக்கல் சுமுகமான முறையில் நடைபெற்றது.

இம்மாநிலத்தில் உள்ள 24 தொகுதிகளில் அதன் சேவையை மஇகா மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிபடையில்  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

கட்சி தேர்தலை முன்னிட்டு தொடக்கமாக இளைஞர், மகளிர் , புத்ரா, புத்ரி ஆகிய பொறுப்புகளுக்கு வேட்பு மனுதாக்கல்  ஈப்போவில் உள்ள மாநில மஇகா அலுவலகத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றது.

அதன் தேர்தல் அதிகாரியாக மாநில மஇகா தலைவர் டத்தோ இளங்கோ வடிவேலு பணியாற்றினார்.

வேட்பு மனுதாக்கலில்  பாகான் டத்தோ தொகுதியில் புத்ரா தலைவர் , துணைத் தலைவர் பதவிகளுக்கும், புத்ரி தலைவி, துணைத் தலைவி பதவிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

மகளிர் பிரிவு தேர்தலில்  தஞ்சோங் மாலிம் தொகுதியில் தலைவி, துணைத் தலைவிக்கும் நேரடி போட்டி நிலவுவதாக நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இளைஞர் பகுதி தேர்தலில் , பாகான் டத்தோ தொகுதியில் துணைத் தலைவர் பதவிக்கு மட்டுமே போட்டி நிலவுதாகவும் தெரிவித்தார்.

தெலுக் இந்தான் தொகுதியில் இளைஞர் பகுதி் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி நிலவுவதாக டத்தோ இளங்கோ கூறினார்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸவரன் தலைமையில் தொடர்ந்து வலுபெற்று வருகிறது. 

இதில் அதிகமான இளைஞர்கள் மேலும் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset