நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல்வாதிகளின் சண்டையில் சிக்கிய மித்ரா நிதி பயன்படுத்தப்படுமா? திருப்பி ஒப்படைக்கப்படுமா?: டத்தோ சரவணக்குமார் கேள்வி

நீலாய்:

இந்திய உருமாற்ற திட்டங்களை மேற்கொண்டு வரும் மித்ரா தற்போது அரசியல்வாதிகளின் சண்டையில் சிக்கியுள்ளது.

இதனால் அந்த நிதி பயன்படுத்தப்படுமா அல்லது திருப்பி ஒப்படைக்கப்படுமா என்று தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் துறையின்கீழ் இருந்து மித்ரா தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டது.

மாற்றப்பட்டதில் இருந்து மித்ராவில் பிரச்சினை சூழ்ந்துள்ளது.

குறிப்பாக மித்ராவை யார் வழிநடத்துவது என்ற சர்ச்சை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

மக்களவை, மேலவையில் தொடர்ந்து நடந்த விவாதங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அண்மையில் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக் கூட்டமும் சர்ச்சையில்தான் முடிந்துள்ளது.

இப்படி பிரச்சினைகளுக்கு நடுவில் மித்ரா மாட்டிக் கொண்டுள்ளது. இப்போதே நான்கு மாதங்கள் ஆகிறது.

எப்போது இப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்? எப்போது திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

குறிப்பாக மித்ரா நிதி பயன்படுத்தப்படுமா அல்லது அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்கபடுமா என்ற விவாதமும் வலுத்து வருகிறது.

ஆகவே பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset