நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் விடுவிப்பை மீட்டெடுக்க மொஹைதின் முயற்சி

கோலாலம்பூர்:

நான்கு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்காக உயர் நீதிமன்றம் தன்னை விடுவித்த  தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின், மேல்முறையீட்டு நீதிமன்றத்தை மீண்டும் கோரியுள்ளார்.

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மொஹைதினை உயர் நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்தது.

அவரது கிரிமினல் வழக்கை மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டது.

தற்போது பிப்ரவரி 28 ஆம் தேதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்து ஒதுக்கித் தள்ளுமாறு மொஹைதின் இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset