நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறையா? மக்களுக்கு வேலை செய்யும் மனப்பான்மை வேண்டும்: பிரதமர் அன்வார் 

புத்ரா ஜெயா: 

நோன்பு பெருநாளுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறை அளிக்கப்படாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இந்த ஏப்ரல் 12-ஆம் தேதி வழக்கம் போல் வேலை செய்யும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

ஏப்ரல் 12-ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 

ஏப்ரல் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் முஸ்லிம்கள் நோன்பு பெருநாளைக் கொண்டாடவுள்ளனர். 

கடந்தாண்டு, நோன்பு பெருநாளைக் கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான சரியான திட்டங்களைச் செய்வதை எளிதாக்குவதற்கு ஒரு கூடுதல் பொது விடுமுறை அளிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset