நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இல்லை

கோலாலம்பூர்:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8,  9 ஆகிய தேதிகளில் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச கட்டணத்தை அரசாங்கம் அறிவித்தது.

இந்த இலவச கட்டணங்கள் ஏப்ரல் 8 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு தொடங்கி மறுநாள் 11.59 மணிக்கு முடிவடையும்.

இந்த டோல் கட்டணம் 37.6 மில்லியன் ரிங்கிட் நிதியை உட்படுத்தியதாகும்.

பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி இதனை தெரிவித்தார்.

இந்த டோல் கட்டண விலக்கு தேசிய எல்லையில் உள்ள டோல் சாவடிகளை உள்ளடக்காது.

அதாவது பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் டோல் (பிஎஸ்ஐ),  ஜொகூர் தஞ்சோங் குபாங் டோல் பிளாசா ஆகியவை இதில் அடங்காது.

டோல் இலவசம் என்பதால் நெடுஞ்சாலைப் பயனாளிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிட பயணிக்க வேண்டும்.

மேலும்  பயண நேர ஆலோசனைக்கு அவர்கள் இணங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset