நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

சென்னை: 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  

முதலில் “இனிமேல்” பாடலை ஆங்கிலத்திலும் ரிலேஷன்ஷிப் தொடர்பாகவும் எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. 

பின்னர் என் அப்பா இதற்குள் வந்தார். அவரே ‘இனிமேல்’ பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். இவ்வாறு தான் “இனிமேல்’ உருவாகி இன்று இந்த மேடையில் இருக்கிறது என்று அவர் கூறினார். 

”இனிமேல்” பாடல் ஆல்பத்தின் மூலம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நிறை குறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை இதன் மூலம் சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கை தான் என்றார் அவர்.

இந்நிலையில், எப்படியாவது நடித்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது. முதலில் இனிமேல் ஆல்பம் பாடல் தொடர்பாக நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் தன்னை அணுகிய போது தனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். 

தான் நடித்து திரையில் தோன்றப் போகும் ஓரிரு கணங்களில் திரையின் பின்னால் அவரின் குரல் ஒலிக்கப் போகிறது என்கின்ற எண்ணமே தன்னை சிலிர்க்கச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் தன் திரைப்பயணத்தில் அஃது ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும் என்றும் நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஆக நடிக்க சம்மதித்ததற்கு 3 காரணங்கள் தான். மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்தது முதற் காரணம். கமல்ஹாசன் சார் இரண்டாம் காரணம், ஸ்ருதிஹாசன் மற்றும் அவரின் குழுவினர் 3-ஆவது காரணம் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset