நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசி விசாரணை துன் மகாதீரை குறிவைத்து நடக்கிறது: மகன்கள்

கோலாலம்பூர்: 

எம்ஏசிசி விசாரணை முன்னாள் பிரதமர் துன் மகாதீரை குறிவைத்து நடக்கிறதுஅவருக்கு எதிரான விசாரணைக்கு உதவும்படி எம்ஏசிசி எங்களை கேட்டுக் கொண்டது என்று அவரின் மகன்கள் கூறினர்.

பல மாதங்களாக 98 வயதான என் தந்தையை குறிவைத்து விசாரணைகள் நடத்தப்படுகிறது.

இந்த வழக்கில் என் தந்தை தான் முக்கிய சந்தேக நபர். எம்ஏசிசியின் விசாரணைகளுக்கு நாங்கள் தான் சாட்சி.

துன் மகாதீரின் மூத்த மகன் மொக்ஸானி இதனை தெரிவித்தார்.

ஜனவரி மாதம் எம்ஏசிசி 1981ஆம் ஆண்டு முதல் மகாதீர் பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்து,

மொக்ஸா, அவரது சகோதரர் மிர்சான் ஆகியோர் தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

கடல்கடந்த வணிகப் பதிவுகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு இருந்தது.

மகாதீரை முக்கிய இலக்காகக் குறிப்பிடாமல் எம்ஏசிசி இந்த விசாரணைகளை மேற்கொண்டது. 

மொக்ஸானியின் இந்த கருத்துக்களைக் கூறவோ அல்லது உறுதிப்படுத்தவோ முடியாது என்று  எம்ஏசிசி செய்தி தொடர்பாளர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset