நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் 97% வாக்காளர்கள் முன்கூட்டியே தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாருவில்  97% முன்கூட்டியே வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளனர்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு இன்று முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெற்றது.

காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட இரண்டு வாக்களிப்பு மையங்கள் மாலை 5 மணிக்கு மூடப்பட்டன.

இதில் கிட்டத்தட்ட முன்கூட்டியே வாக்களிக்க தகுதி பெற்றிருந்த எண்ணிக்கையில் 97 சதவீதம் பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

அதாவது போலீஸ், ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 769 பேர் வாக்களித்தனர்.

இதனை தேர்தல் ஆணைய அதிகாரி இக்மல்ரூடின் இஷாக் உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset