நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில்  2 மலேசியர்கள் காயமடைந்தனர்

யாலா:

நராதிவாட் மாநிலத்தில் நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பில்  8 பேர் காயமடைந்தனர்.

இதில் இரண்டு பேர் மலேசியர்கள் என்று சொங்லாவில் உள்ள மலேசிய தூதர் அஹ்மத் பாஹ்மி உறுதிப்படுத்தினார்.

இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.

காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

இரவு 9.35 மணிக்கு 5 மோட்டார் சைக்கிள்கள் வெடித்து தீப்பற்றி எரிந்தன.

அங்கு தான் வெடிக் குண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset