செய்திகள் மலேசியா
கெஅடிலான் கட்சி கடுமையாக உழைக்கிறது; தேசியக் கூட்டணி தான் பிளவுப்பட்டுள்ளது: ஸ்டீவன் சிம்
உலுசிலாங்கூர்:
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் கெஅடிலான் கட்சி கடுமையாக உழைத்து வருகிறது.
ஆனால் தேசியக் கூட்டணி தான் பிளவுப்பட்டு வருகிறது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் வெற்றி பெற கெஅடிலான் கடுமையாக உழைத்து வருகிறது.
ஆனால் தேசியக் கூட்டணியில் நிலவரம் அப்படி இல்லை.
பாஸ் கட்சி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளதாக நான் நம்புகிறேன். அதே வேளையில் பெர்சத்து கட்சியிலும் பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளது.
ஆகவே கெஅடிலான் கட்சி முழுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை.
நம்பிக்கை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
அதே போன்று தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
கோல குபு பாருவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டீவன் சிம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm