நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையின்மையால் மலாய்க்காரர்கள் அல்லாதாவர்கள் பாடு தளத்தில் பதிவு செய்யவில்லையா? ரஃபிசி ரம்லி மறுப்பு 

கோலாலம்பூர்: 

பாடு முதன்மை தரவு தளத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் குறைந்த அளவில் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் நம்பிக்கையின்மையால் பாடு தரவு தளத்தில் பதிவு செய்யவில்லை என்று வெளியாகியக் கூற்றைப் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி மறுத்துள்ளார். 

மலாய்க்காரர்கள், மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் இது போன்று மாதந்தோறும் அரசாங்கத்திடமிருந்து உதவி பெறும் பழக்கம் இல்லை என்று ரஃபிசி கூறினார்.

அதனால்தான் அவர்கள் அரசாங்கத்தின் தரவு தளத்தில் அதிகம் பதிவு செய்வதில்லை. 

அவர்களில் பெரும்பாலோர் எம்40 மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவில் உள்ளனர்.

அதன் காரணமாக அவர்கள் எந்த அரசு உதவிக்கும் தகுதியற்றவர்கள். 

மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் ஏன் பாடு தரவு தளத்தில் குறைவாகப் பதிவு செய்துள்ளனர் என்று அஹ்மத் ஃபாத்லி ஷாரியின் கூடுதல் கேள்விக்கு ரஃபிசி இவ்வாறு பதிலளித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset