செய்திகள் மலேசியா
சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு சுல்தான் இப்ராஹிம் சிறப்பு வருகை
சிங்கப்பூர்:
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்டுள்ளார்.
மாமன்னருடன் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், சிங்கப்பூர் வெளியுறவுத் துறை டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்தச் சிறப்பு வருகையின் போது உடனிருந்தனர்.
நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்த மாமன்னரைச் சிங்கப்பூர் சபாநாயகர் சியாஹ் கியான் பெங் வரவேற்றார்.
சபாநாயகரின் நாற்காலிக்கு எதிரே, நாடாளுமன்ற அறையில் அமைந்துள்ள சபாநாயகர் கேலரியில் இருந்து மாமன்னர் சுமார் ஐந்து நிமிடங்கள் நாடாளுமன்ற அமர்வைக் கவனித்தார்.
இதனிடையே, அரசியார் ராஜா ஜரித் சோஃபியா, சிங்கப்பூர் கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றுள்ளார்.
மலேசியாவுக்குப் புறப்படுவதற்கு முன், மாமன்னர் விரைவு போக்குவரத்து அமைப்பு இணைப்பு (ஆர்டிஎஸ் இணைப்பு) நிலையத் திட்டத்தின் முன்னேற்றத்தைக் காணத் திட்டமிடப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm