நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் கனி சாலே இதனை தெரிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் வாக்களிக்க அனைத்து வாக்காளர்களும் வெளியே செல்ல வேண்டும்.

வாக்களிக்க வெளியே செல்லாமல் இருப்பது சரியில்லை. இதுவொரு சிறந்த முடிவும் அல்ல. 

மேலும் வழக்கம் போல்,  தேர்தல் ஆனையம் நல்ல வாக்கு சதவீத பதிவை விரும்புகிறது.

இம்முறை தேர்தல் ஆணையம் 75 சதவீத  வாக்குப் பதிவை இலக்காக நிர்ணயித்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset