செய்திகள் மலேசியா
சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதை கல்வியமைச்சு கடுமையாக கருதுகிறது: ஃபாட்லினா
புத்ராஜெயா:
கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை கல்வியமைச்சு கடுமையாக கருதுகிறது என்று அதன் அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கல்வியமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு, பிரதமர் துறையின் சட்ட விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றுடன் கல்வியமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது.
கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை ஒழிக்கும் வழிகாட்டுதல், பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.
மேலும் பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார்கள், கேள்விக்குரிய நடத்தை பற்றி ஆசிரியர்களுக்குத் தெரிந்தவுடன் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கல்வியமைச்சு விளக்கும் என்று ஃபாட்லினா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm