நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல் திர்மிஸி பள்ளிவாசலில் 500 பேருக்கு நோன்பு கஞ்சி: மஹா பெர்ஜாயா நிறுவனம் வழங்கியது

பெட்டாலிங்ஜெயா:

தாமான் ஸ்ரீ செந்தோசா அல் திர்மிஸி பள்ளிவாசலில் 500 பேருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

நோன்பை முன்னிட்டு மஹா பெர்ஜாயா நிறுவனம் இதனை வழங்கியது என்று அதன் விற்பனை பிரிவு அதிகாரி மாஹ்பூஸ் கூறினார்.

நாட்டில் உறைந்த உணவுத் துறையில் (frozen food) முன்னணி நிறுவனமாக மஹா பெர்ஜாயா விளங்கி வருகிறது.

ஒவ்வொரு நோன்பு, பெருநாள் காலங்களில் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் பல நடவடிக்கைகளை மஹா பெர்ஜாயா மேற்கொண்டு வருகிறது.

இவ்வாண்டு 4 பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சியை உணவையும் வழங்கி வருகிறது.

அவ்வகையில் தாமான் ஸ்ரீ செந்தோசாவில் உள்ள அல் திர்மிஸி பள்ளிவாசலில் இன்று 500 பேருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நோன்பு கஞ்சியை பெற்று சென்றனர் என்று மாஹ்பூஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset