நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் வார்த்தை விவகாரத்தின் விசாரணையில் அரசு தலையிடாது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

கேகே சூப்பர் மார்ட்டில் அல்லாஹ் வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகள் விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையில் அரசுத் தலையிடவில்லை என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்துவதற்கு காவல்துறைக்கு அரசாங்கம் முழு அனுமதி அளித்துள்ளது.

மேலும், இந்தப் பிரச்சனை தனிநபரால் தீர்க்கப்படாது.

அதனால், இந்த வழக்கு விசாரணையைக்  காவல்துறையிடம் விட்டுவிடுவதாகவும் அன்வார் கூறினார். 

அதே சமயம் இந்நாட்டில் இஸ்லாமிய விவகாரம் மட்டுமல்ல மற்ற இனத்தை இழிவுப்படுத்துவது தொடர்பான எந்தப் பிரச்சனையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது என்றார் அவர். 

ஆகவே, அத்தகைய செயல் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கை தேவை என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset