நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தமிழ்நாடும் கேரளாவும் எனக்கு இரு கண்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

திருவனந்தபுரம்:

கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய இடங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தின் அருகே குவிந்திருந்த ரசிகர்களை சந்திக்க முடிவு செய்த நடிகர் விஜய், வாகனத்தின் மீது ஏறி ரசிகர்கள் மத்தியில் பேசினார். 

அப்போது, தமிழ்நாடும் சரி, கேரளாவும் சரி எனக்கு இரு கண்கள் மாதிரி.

உங்க வீட்டுப் பிள்ளையாக பார்க்கிறீங்க. அது உண்மையிலேயே எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.

அப்படியே உங்க மனசில் வாழ்ந்திடணும்னு ஆசையா இருக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார். 

பின்னர் கைத்தொலைபேசியில் செல்ஃபி வீடியோ எடுத்த விஜய், வரும் வழியில் ஒரு குழந்தையை கொஞ்சினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset