நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரின் முன்னாள் உதவியாளர் மீது இஷாம் போலீசில் புகார்

கோலாலம்பூர்:

அன்வாரின் முன்னாள் உதவியாளர் ஃபார்ஹாஷ் மீது அம்னோ முன்னாள் தகவல் பிரிவு தலைவர் இஷாம் ஜாலீல் புகார் செய்துள்ளார்.

பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளரான அவர் ஹைடேக் பாடு முக்கிய பங்குதாரராக உள்ளார்.

கிட்டத்தட்ட 40 மில்லியன் ரிங்கிட்டை அவர் அதில் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீட்டுக்கு அவருக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்பதை விளக்க வேண்டும் என்று இஷாம் கூறினார்.

உண்மையில் அவர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் அது மிகப் பெரிய முதலீடாகும்.

அப்படியானல் இந்த விவகாரத்தை போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புகார் செய்யப்பட்டது.

அடுத்து இந்த விவகாரம் அதிகார துஷ்பிரயோக கூறுகளை உள்ளடக்கியிருக்கலாம்.

இதனால் எம்ஏசிசியில் புகார் செய்யப்படும் என்று இஷாம் ஜாலில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset