செய்திகள் மலேசியா
ஜெர்மனி, பிரான்ஸ் பயணத்தின் மூலம் 4600 வெள்ளி கோடி முதலீட்டு வாய்ப்புகள்: தெங்கு ஜப்ருல்
கோலாலம்பூர்:
ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், முதலீட்டுப் பயணத்தின் வாயிலாக 4,600 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடு வாய்ப்புகளை மலேசியா பெற்றுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜப்ரில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 240 கோடி வெள்ளி மதிப்புள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை மலேசியா பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்நாடுகளின் பிரசித்திப் பெற்ற நிறுவனங்களான எக்ஸ்-பேப், மேலாக்சிஸ், இன்ஃபினியோன் டெக்னோலோஜிஸ், ஏர்பஸ் குரூப், ஸ்கூட் க்ளாஸ், பி.எம்.டபள்யூ., நெக்ஸ்ப்ரியா, பி-பிராவுன், மிஷலின் ஆகியவற்றின் பங்கேற்பையும் மலேசியா பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் முதலீடு செய்யவும் இந்நாட்டுடன் விவேக பங்காளித்துவ ஒத்துழைப்பை நல்கவும் மூன்று நிறுவனங்கள் தங்களின் ஆர்வத்தைப் புலப்படுத்தியுள்ளதாக இந்த முதலீட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்கிய தெங்கு ஜப்ருல் தெரிவித்தார்.
இந்நாட்டில் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கும் உயர்திறன் கொண்ட மனித ஆற்றலின் உருவாக்கத்திற்கும் இந்த ஒத்துழைப்பு பெரிதும் துணை புரியும் என்பதோடு நாட்டின் பொருளாதார வடிவமைப்புக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு வர்த்தகர்களுடனான இந்தச் சந்திப்பு தமது வியூக ஈடுபாட்டின் ஒரு பகுதியாகவும் 2030 புதிய தொழில்துறை பெருந்திட்ட அமலாகத்தை புதுப்பிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது.
மலேசியாவில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக விரைவான திட்ட அமலாக்கம் மற்றும் நட்புறவு வர்த்தக நிலைப்பாட்டிற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm