நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தையின் கழுத்தை துண்டித்த தாய் 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு: காவல் துறைத் தலைவர் குமார்

ஜொகூர்பாரு:

குழந்தையின் கழுத்தை தாய் ஒருவர் துண்டித்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக ஆறு நபர்களின் வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதனை ஜொகூர் போலீஸ் தலைவர் எம். குமார் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று இங்குள்ள பாசிர் கூடாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வயது ஆறு மாத குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணைக்கு அம் மாதுவின் கணவர், குடும்ப உறுப்பினர்கள்,  அண்டை வீட்டார் உள்ளிட்ட தனிநபர்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்கினர்.

32 வயதான அப்பெண்ணின் உடல்நிலை குறித்த முழுமையான அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் உடல்நிலை பாதிப்புகள்  இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஆனால், மருத்துவமனையின் முழு அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset