செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
பெட்டாங்ஜெயா:
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் ஆண்டுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2024-2026ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழுவுக்கான தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலுக்கான வாக்களிப்பு மாலையில் முடிவடைந்த நிலையில் பல முறை வாக்கு எண்ணப்பட்டு நள்ளிரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் நடப்பு தலைவர் நிவாஸ் ராகவன் 249 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட விகேகே ராஜசேகரன் 244 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
பிரபாகரன் 256 வாக்குகளை பெற்று துணைத் தலைவராக தேர்வு பெற்றார்.
288 வாக்குகள் பெற்ற பன்னீர் செல்வம் உதவித் தலைவராகவும் 257 வாக்குகள் பெற்ற செல்வராஜ் பொருளாளராகவும் தேர்வு பெற்றார்.
பிரவின் செல்வம், டாக்டர் சித்ராதேவி, டோனி, பௌவியா பிபி, பிரபாகரன் ராஜா, டாக்டர் நவமணி, ஹோ. செல்வராஜ், கவிமாறன், ராஜசேகர், மோகனா, குட்டிகிருஷ்ணன், அமுதா, ராம்குமார், சண்முக செல்வி ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2024, 8:38 pm
கற்றுத் தந்த ஆசானுக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 15, 2024, 6:39 pm
மாமனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி மகத்தானது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 15, 2024, 4:29 pm
இந்தியர்களின் நம்பிக்கை காப்பாற்ற பிரதமர் தவறி விட்டார்: சந்திரகுமணன்
May 15, 2024, 4:04 pm