நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்

கோலாலம்பூர்:

பெர்சாத்து கட்சி உறுப்பினர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் (செகுபார்ட்)  மீது சைபர் குற்றவியல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு, நிந்தனை என இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிபதி சித்தி அமினா கசாலி முன் செகுபார்ட் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து செகுபார்ட் விசாரணை கோரியுள்ளார். 

செகுபார்ட் சார்பில் வழக்கறிஞராக ரபீக் ரஷீத் அலி ஆஜரனார்.

மேலும் செகுபார்ட்டிற்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset