செய்திகள் மலேசியா
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை 2 முதல் 3 ரிங்கிட் வரை குறையும்: அமைச்சர் சாபு
கோலாலம்பூர்:
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் சில்லறை விற்பனை விலை இன்று முதல் சந்தையில் ரிங்கிட் 2 முதல் 3 ரிங்கிட் வரை குறையும்.
விவசாயம், உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் முஹம்மத் சாபு இதனை தெரிவித்தார்.
தற்போது, 10 கிலோ கிராம் பேக்கேட் அரிசி 38 முதல் 45 ரிங்கிட் வரையிலான விலையில் விற்கப்படுகிறது.
மேலும் புதிய மாற்றத்துடன், அதே அரிசி பேக்கெட்டின் சில்லறை விலை 35 ரிங்கிட்டாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய வாழ்வாதார நடவடிக்கை கவுன்சில் கூட்டத்தின் மூலம் இந்த முடிவு இறுதி செய்யப்பட்டது.
மேலும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பெர்னாஸ் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலையை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
அதன்படி, மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்காக, சந்தையில் 2 முதல் 3 ரிங்கிட் வரையிலான இறக்குமதி வெள்ளை அரிசியின் சில்லறை விற்பனை விலையில் குறைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
அதன் அடிப்படையில் இன்று முதல் அது அமலுக்கு வருகிறது என்று சாபு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am