செய்திகள் மலேசியா
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
பத்தாங் பெர்ஜுந்தாய்:
தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக் கூடல் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் ஆகியோர் தலைமையேற்றனர்.
தென்னமரத் தோட்ட ஶ்ரீ வீர மகா மாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
ஆலயத்தின் மண்டப நிர்மாணிப்புக்கு நிதி திரட்டும் நோக்கில் இவ்விழா நடத்தப்பட்டது.
ஒரு தொண்டு நிகழ்வு வெற்றியடைய மக்களை ஒன்றிணைப்பது ஒரு சிறந்த வழியாகும்.
சமூகத்தின் கல்வி, மத நடவடிக்கைகளில் உதவுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே, அனைவரும் ஒற்றுமையாக இருந்து சமூக முன்னேற்றத்திற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.
குறிப்பாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2024, 6:26 pm
மலேசியாவின் மக்கள் தொகை 34 மில்லியனை எட்டியுள்ளது
May 14, 2024, 6:19 pm
மலேசியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு மரணம் பதிவாகிறது
May 14, 2024, 4:42 pm
மரம் விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நிதியுதவி வழங்கினார்
May 14, 2024, 4:21 pm
சுங்கை பூலோவில் தொழிலாளர் - அன்னையர் தினக் கொண்டாட்டம்
May 14, 2024, 1:05 pm