செய்திகள் மலேசியா
அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறைகள்: மாமன்னர் அதிருப்தி
கோலாலம்பூர்:
பல்பொருள் அங்காடி கடைகளில் அல்லாஹ் என்ற வார்த்தைக் கொண்ட காலுறைகள் விற்பனை செய்வது தொடர்பான சர்ச்சையில் தனது அதிருப்தியை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் முகநூல் பதிவின் வாயிலாக வலியுறுத்தினார்.
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை மதிக்கிறார்கள்.
அம்மக்களின் கோபத்தை தூண்டும் இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லையா, காலுறைகள் இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.
முன்னதாக கேகே மார்ட் விற்கப்பட்ட காலுறைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am