செய்திகள் மலேசியா
மலேசியக் கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி கழகத்தின் ஏற்பாட்டில் அவிரா நாடகப் போட்டி ஜூன் மாதம் நடைபெறவுள்ளது
கோத்தா பாரு:
மலேசியக் கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி கழகம் அவிரா நாடகப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நாடகப் போட்டி ஜூன் மாதம் 30-ஆம் தேதி கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மொத்தம் பத்து குழுக்கள் கலந்து கொள்ளவிருக்கின்றன.
மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி கழகம் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அவிரா நாடகப் போட்டியானது மாணவர்களின் கலை திறமையை வெளிக்காட்ட ஒரு முயற்சியாகும்.
இந்தத் திட்டம் மாணவர்களிடை யே நாடகக் கலைகளில் பங்கேற்பதை ஊக்குவிப்பதோடு கலையின் மதிப்பு பற்றிய விழிப்புணர்வை வலுப்படுத்துகிறது.
இந்நாடகக் கலை வழி இளைஞர்கள், சமூகத்தில் கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சிக்குப் பங்களிக்கின்றனர்.
அவிரா நாடகப் போட்டியை நடை முறைப்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகம் மற்றும் சமூகத்திற்கும் நாடகக் கலை பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து நன்மை பயக்குவதோடு மாணவர்கள் மற்றும் சமூகத்தில் சமூக உறவுகளையும் வலுப்படுத்தும்.
இந்தச் செயல்முறை திட்டத்தின் மூலம் பங்கேற்பாளர்கள் தனித்து நிற்க வா ய்ப்பளிப்பதோடு ஒத்துழைப்பு திறன்களை வளர்க்கும்.
இப்போட்டியின் அதிகாரப்பூர்வ இணைய ஊடகமாக நம்பிக்கை இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 14, 2024, 6:26 pm
மலேசியாவின் மக்கள் தொகை 34 மில்லியனை எட்டியுள்ளது
May 14, 2024, 6:19 pm
மலேசியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு மரணம் பதிவாகிறது
May 14, 2024, 4:42 pm
மரம் விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நிதியுதவி வழங்கினார்
May 14, 2024, 4:21 pm
சுங்கை பூலோவில் தொழிலாளர் - அன்னையர் தினக் கொண்டாட்டம்
May 14, 2024, 1:05 pm