செய்திகள் மலேசியா
பத்து பகாட் தொழிற்சாலையில் அதிரடி சோதனை: அல்லாஹ் வார்த்தைக் கொண்ட 5 காலுறைகள் பறிமுதல்
ஜொகூர்பாரு:
பத்து பகாட் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் அல்லாஹ் வார்த்தைக் கொண்ட 5 ஜோடி காலுறைகள் பறிமுதல் செய்யப்பட்டது
இதனை பத்து பகாட் போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோல்லா உறுதிப்படுத்தினார்.
கேகே மார்ட்டில் அல்லாஹ் வார்த்தை அடங்கிய காலுறைகள் விற்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜொகூரில் உள்ள பத்து பகாட் பகுதியில் உள்ள ஸ்ரீ காடிங் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையில் அல்லாஹ் வார்த்தை பொறிக்கப்பட்ட 5 ஜோடி காலுறைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காலுறைகள் சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்டதாகவும், தொழிற்சாலை உள்ளூர் சந்தைக்கான பேக்கேஜிங், விநியோகத்தில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக கேகே மார்ட் கடைகளுக்கு மட்டும் அனுப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am