நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து பகாட் தொழிற்சாலையில் அதிரடி சோதனை: அல்லாஹ் வார்த்தைக் கொண்ட 5 காலுறைகள் பறிமுதல்

ஜொகூர்பாரு:

பத்து பகாட் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் அல்லாஹ் வார்த்தைக் கொண்ட 5 ஜோடி காலுறைகள் பறிமுதல் செய்யப்பட்டது

இதனை பத்து பகாட் போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோல்லா உறுதிப்படுத்தினார்.

கேகே மார்ட்டில் அல்லாஹ் வார்த்தை அடங்கிய காலுறைகள் விற்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜொகூரில் உள்ள பத்து பகாட் பகுதியில் உள்ள ஸ்ரீ காடிங் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில் அல்லாஹ் வார்த்தை பொறிக்கப்பட்ட 5 ஜோடி காலுறைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காலுறைகள் சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்டதாகவும், தொழிற்சாலை உள்ளூர் சந்தைக்கான பேக்கேஜிங், விநியோகத்தில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக கேகே மார்ட் கடைகளுக்கு மட்டும் அனுப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset