நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட விவகாரம்: நால்வர் கைது

காஜாங்:

பள்ளி மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் காஜாங்கில் உள்ள ஒரு பள்ளியின் முன்புறம் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் இரண்டு மாணவர்கள் இரும்பு கம்பிகளால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இச்சம்பவம் தொடர்பில் 18 முதல் 21 வயதுடைய சந்தேக நபர்கள் அம்பாங்கைச் சுற்றி கைது செய்யப்பட்டன.

இவர்கள் அனைவரும் விசாரணைக்கு உதவுவதற்காக மார்ச் 22 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இதனை காஜாங் போலீஸ் தலைவர் முகமத் சைட் ஹசான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset